லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசாகியிருக்கும் "கைதி' படம்மூலமாக நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகியிருக்கிறார்.

Advertisment

இப்போது பிரபு சாலமன் இயக்கத்தில் "கும்கி-2'-விலும், "அந்தகாரம்' என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துவருகிறார்.

nn

இந்த அர்ஜுன் தாஸ் யார்? எங்கிருந்து வந்திருகிறார்? துபாயில் வங்கி ஒன்றில் வேலை செய்துகொண்டி ருந்த அர்ஜுன் தாஸ், ஒரு நடிகனாக வேண்டுமென்ற தனது நெடுநாள் கனவைப் பூர்த்தி செய்ய, தனது வேலையை உதறித் தள்ளி விட்டுச் சென்னை வந்தார்.

Advertisment

சென்னைக்கு வந்த அர்ஜுன் தாஸ், முதலில் "கூத்துப்பட்டறை'-யிலும் அதன்பின் "ஏவமிலும்' நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டார். பிறகு வாய்ப்புகளைத் தேடத் துவங்கினார்.

விடாமல் வாய்ப்புக்காகப் போராடினார் அர்ஜுன் தாஸ். நான்கு ஆண்டு போராட்டத்திற்குப்பிறகு லோகேஷ் கனகராஜின் "கைதி' படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

""நான் ஆர்.ஜே.வாக வானொலி நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, திரைத்துறையில் பலரை சந்திக்க வாய்ப்பு கிட்டியது. இந்த காலகட்டத் தில்தான் "கைதி' படத்தில் நடிப்பதற்கு ஒரு ஆடிஷனுக்கு என்னை அழைத்தார்கள்.

அந்த ஆடிஷனில் கலந்து கொண்டேன்.

Advertisment

இந்த வாய்ப்பு கிட்டியது- "கும்கி' இரண்டாம் பாகத்தில் எனது கதாபாத்தி ரம் நன்மையும் தீமையும் கலந்த ஒரு குணாதிசயம் கொண்டது. இந்தப் படத் தில், என் பகுதிகளை நடித்து முடித்துள்ளேன்.

"அந்த காரம்' என்னும் மற்றொரு படம், விக்னராஜன் எனும் புதிய இயக்குநரால் இயக்கப் படுகிறது. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன'' என்கிறார் அர்ஜுன் தாஸ்.